×

கிருஷ்ணகிரி அணையில் நீர் திறப்பு 5 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

கிருஷ்ணகிரி:  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, மீண்டும் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி, உபரிநீர் முழுவதும் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. நேற்று காலை 7 மணி நிலவரப்படி அணைக்கு 410 கனஅடி  வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 347 கனஅடி திறக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் பெய்த பலத்த மழையால், ஓசூர் அருகில் உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு 707 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, அணையில் இருந்து 640 கனஅடி நீர், தென்பெண்ணை ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதனால், கிருஷ்ணகிரி அணைக்கு நேற்று மதியம் நீர்வரத்து 768 கனஅடியாக அதிகரித்தது. அந்த நீர் முழுவதும் திறக்கப்பட்டுள்ளது.  இதனால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய 5 மாவட்ட தென்பெண்ணை ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags : Krishnagiri dam , Krishnagiri Dam, water opening, flood warning
× RELATED சாத்தனூர் அணை நீர்மட்டம் 117.85 அடியாக...