×

சிறை அலுவலர் பணிக்கு வரும் 27ல் நேர்முக தேர்வு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

சென்னை: சிறை அலுவலர் பணிக்கான நேர்முகத் தேர்வு வரும் 27ம் தேதி நடக்கிறது என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு சிறைப்பணிக்கான சிறை அலுவலர் பதவிக்கான தேர்வு நடத்தப்பட்டது. இதில் 548 பேர் கலந்து கொண்டனர். இவ்வாறு கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிக்கான அறிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் நேர்காணல் தேர்விற்கு தற்காலிகமாக 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் ெவளியிடப்பட்டுள்ளது. இவர்களுக்கான நேர்காணல் தேர்வு வரும் 27ம் தேதி நடக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : DNPSC , Prison Officer, Job, Interview, TNPSC
× RELATED டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வர்களுக்கு இலவச வகுப்புகள்: கலெக்டர் தகவல்