×

அந்தியூரில் டிஎஸ்பி உள்பட 7 போலீசாருக்கு கொரோனா

அந்தியூர்: இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திய பிறகும், அந்தியூரில் டிஎஸ்பி உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் நிலையத்தில் 41 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஒரு இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐ,  2 சிறப்பு  எஸ்ஐக்கள், 20 தலைமை காவலர்கள், 16 காவலர்கள் அடங்குவர். இங்கு ஒரு சரக டிஎஸ்பி, தலைமைக் காவலர் மற்றும் தனிப்பிரிவு காவலர், 2 பெண் காவலர்கள் உள்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்கள் அனைவரும் 2வது தவணை கொரோனா தடுப்பு ஊசி போட்டுக் கொண்டவர்கள் என்பது  குறிப்பிடத்தக்கது. பாதிக்கப்பட்ட 7 பேரும் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளனர்.

Tags : Corona ,Anthiyur , Corona to 7 policemen including DSP in Anthiyur
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...