×

அனைத்து பிரச்னைக்கும் உடனடி தீர்வு காண்பேன்: அதிமுக வேட்பாளர் மோகனபிரியா உறுதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலப்பாக்கம் முன்னாள் தலைவர் சல்குருவின் மகளான 5வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் இளம் வாக்காளர் எஸ்.மோகனப் பிரியா, வல்லம் பகுதி 23 வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் குமாரிராஜா. இரட்டை இலை சின்னத்திலும் வல்லம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் அருள்தாசனுக்கு ஆட்டோ சின்னத்திலும் வாக்குகள் கேட்டு காட்டாங்கொளத்தூர் ஒன்றிய முன்னாள் சேர்மனும், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளருமான சம்பத்குமார் தலைமையில் வல்லம் ஊராட்சிக்கு உட்பட்ட நாவிதர்நகர், சாந்திநகர், நேருநகர், திருப்போரூர் கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக திறந்தவெளி ஜீப்பிலும் வீடு வீடாக சென்றும் மக்களை நேரில் சந்தித்தும் தங்களது தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் துண்டு பிரசுரங்களாக வழங்கி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

என்னை வெற்றி பெற செய்தால் இப்பகுதியில் பழுதடைந்துள்ள அனைத்து சாலைகள் மற்றும் தேவைக்கேற்ப புதிய சாலைகளை அமைத்து தருவேன். மேலும் கூடுதலாக தெருவிளக்குகள் குடிநீர் பிரசினை சமுதாயநலக்கூடம் என அனைத்து பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றி தருவேன். அதோடு மட்டுமல்லாமல் இப்பகுதியில் மக்களின் உரிமைகளை மாவட்ட குழு உறுப்பினர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக பேசி அழுத்தம் கொடுத்து உடனடி தீர்வு காண்பேன் என தனது வாக்குறுதிகளை முன்வைத்தார். மக்களின் ஆதரவை வெகுவாக கவர்ந்துள்ள இளம் ண் வேட்பாளர் மோகனப்ரியாவிற்கு வழி நெடுக உற்சாக வரவேற்பு வழங்கியதோடு ஆர்த்தி எடுத்து வெற்றி பெற வாழ்த்தினர்.

Tags : AIADMK ,Mohanapriya , I will find an immediate solution to all the problems: AIADMK candidate Mohanapriya confirmed
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...