சென்னை: நாகை திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோயிலில் நவம்பர் 10ம் தேதி முதல் 19ம் தேதி வரை பிரமோற்சவம் நடத்தப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை தகவல் தெரிவித்துள்ளது. பிலவ ஆண்டு முடிவதற்குள் பிரமோற்சவம் நடத்த உத்தரவிடக்கோரி வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.