சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சாமிநாதன் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் வாங்கிக்கொண்டு பேராசிரியர்கள் உள்ளிட்ட பணியிடத்துக்கு 154 தகுதியற்ற நபர்களை நியமித்ததாக புகார் எழுந்த நிலையில் முன்னாள் துணைவேந்தர் சாமிநாதன் மற்றும் முன்னாள் பதிவாளர் அங்கமுத்து மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.