×

திருச்செங்கோடு அருகே பனை விதைகள் நடவு

திருச்செங்கோடு : திருச்செங்கோடு தாலுகா மல்லசமுத்திரம் ஒன்றியம், இ.புதுப்பாளையம் ஊராட்சியில், காந்தி ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஊராட்சி மன்ற தலைவர் மாயக்கண்ணன் தலைமையில், பஞ்சாயத்திற்கு உட்பட்ட, அரளிகுட்டைகரை மற்றும் சாலை ஓரங்களில் நீர்நிலைகளை பாதுகாக்க, பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட 1100 பனை விதைகளை நடவு செய்தனர். எலச்சிபாளையம் பி.டி.ஓக்கள் அருண்குமார், உஷா, வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் பெரியசாமி, தனியார் தொண்டு நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Tiruchengode , Tiruchengode: Tiruchengode Taluka Mallasamudram Union, E. Pudupalayam Panchayat, on the eve of Gandhi Jayanti
× RELATED லாரியில் கொண்டு வந்த ₹1.13 லட்சம் பறிமுதல்