×

கணவனை பிரிந்த பிறகு சமந்தா வெளியிட்ட கருத்தால் ரசிகர்கள் குழப்பம்

சென்னை: கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரும், தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை விட்டுப் பிரிந்த நடிகை சமந்தா, நாக சைதன்யா கொடுக்க முன்வந்த ரூ.200 கோடி ஜீவனாம்சம் தொகையை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதையடுத்து நாக சைதன்யாவுடன் ஐதராபாத்தில் வசித்து வந்த வீட்டை சொந்தமாக வாங்கியுள்ளார். தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ள சமந்தா, தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

அதில் அவர், ‘இந்த உலகத்தை நான் மாற்ற விரும்பினால், முதலில் என்னை நான் மாற்றிக்கொள்ள  வேண்டும். அதிக நேரம் தூங்கக்கூடாது,  அலமாரியை துடைப்பது உள்பட பல விஷயங்களை நானே செய்தாக வேண்டும். நம் கனவை ஜெயிக்க  அதை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார். இதன்மூலம் சமந்தா என்ன சொல்கிறார் என்று தெரியவில்லை, அவரது பதிவு குழப்பத்தை ஏற்படுத்துகிறது என்று ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

Tags : Samantha , Husband, Samantha, fans, record
× RELATED உடல்நிலை பாதித்த என்னை விமர்சித்தனர்: சமந்தா உருக்கம்