×

உள்ளாட்சி தேர்தல் அதிமுக வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம்  ஆலப்பாக்கம் முன்னாள் தலைவர் சல்குரு  மகள் எஸ்.மோகனபிரியா, 5வது வார்டு மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கும், பாலூர் 17வது வார்டு ஒன்றிய கவுன்சிலருக்கு அதிமுக சார்பில்  கலைவாணி ஆகியோர் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர். அப்போது பாலூர், வில்லியம்பாக்கம், திம்மாவரம், ஆத்தூர் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக திறந்தவெளி ஜீப்பிலும், நடந்து சென்று வீடு வீடாக மக்களை நேரில் சந்தித்து பிரசாரம் செய்தனர். அப்போது பேசிய எஸ்.மோகனபிரியா ‘‘என்னை வெற்றி பெற செய்தால், இப்பகுதியில் பழுதடைந்துள்ள அனைத்து சாலைகளையும்  புதிய சாலைகளாக அமைத்து தருவேன்.

மேலும்,   உங்களது அனைத்து பிரச்னைகளையும், கோரிக்கைகளையும்  மாவட்ட குழு உறுப்பினர் என்ற முறையில் கலெக்டரிடம் நேரடியாக கொண்டு சென்று, அழுத்தம் கொடுத்து  உடனடி செய்து முடிப்பேன் என வாக்குறுதிகளை  முன்வைத்து, மக்களின் ஆதரவை திரட்டினார். மக்களை வெகுவாக கவர்ந்த இளம் பெண் வேட்பாளர் மோகனப்ரியாவின் எளிமையான அணுகுமுறை மக்களுக்கு பிடித்துபோனதால், போகும் இடமெல்லாம் அவருக்கு ஆரத்தி எடுத்து அமோக வரவேற்பளித்தனர். அவருடன், மறைமலைநகர் முன்னாள் நகர்மன்ற தலைவர் எம்.ஜி.கே.கோபிக்கண்ணன்,  ஒன்றிய துணை செயலாளர் வடகால் மாரி  உள்பட அதிமுக  நிர்வாகிகள் மற்றும் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.



Tags : AIADMK , Local elections, AIADMK, candidates
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...