×

பட்டாசுகள் தயாரிப்பில் விதிமீறலில் ஈடுபடவில்லை என உச்சநீதிமன்றத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள் பதில் மனு

டெல்லி: பட்டாசுகள் தயாரிப்பில் விதிமீறலில் ஈடுபடவில்லை என உச்சநீதிமன்றத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் பட்டாசுகளை தயாரிக்கிறோம் என பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். பட்டாசில் பேரியம் நைட்ரேட் முழுமையாக பயன்படுத்தப்பட்டதாக சிபிஐ-யின் குற்றச்சாட்டை மறுப்பதாகவும் பதில் மனு அளித்துள்ளனர். செறிவூட்டப்பட்ட பேரியத்திற்கு வருங்காலத்தில் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் சேமித்து வைத்துள்ளோம் என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். நீரி உள்ளிட்ட அமைப்புகள் பட்டாசில் 30% பேரியம் பயன்படுத்தலாம் என்ற பரிந்துரையின் படியே குறிப்பிட்ட சதவிகிதம் பயன்பாடு என பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags : Supreme Court , Fireworks
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...