×

சாலையில் திரியும் மனநலம் பாதித்தவர்கள் எத்தனை பேர்? அவர்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எத்தனை பேர்?: அறிக்கை அளிக்க ஐகோர்ட் ஆணை..!!

சென்னை: சாலையில் திரியும் மனநலம் பாதித்தவர்கள் எத்தனை பேர்? அவர்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எத்தனை பேர்? என்பது தொடர்பாக அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநில மனநல கொள்கையை அமல்படுத்த கோரியும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட சிறப்பு முகாம் அமைக்க கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்ரீரேஞ்சர்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அந்த அறிக்கையில், தமிழகம் முழுவதும் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் திரிந்த 396 பேர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இந்த அறிக்கையில் அரசால் மீட்கப்பட்டவர்களில் சென்னையில் ஒருவர் கூட இல்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், சென்னையில் இருப்பவர்களை கண்டறிய தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் அவ்வாறு மீட்கப்பட்டவர்களை முகாம்களில் தங்கவைத்து கொரோனா தடுப்பூசி செலுத்தி உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

மேலும், மேல்பாக்கத்தில் உள்ள காப்பகத்தை சீரமைக்கவும், புதிய கட்டிடம் கூட கட்டலாம் என ஆலோசனை தெரிவித்த நீதிபதிகள், சாலையில் திரியும் மனநலம் பாதித்தவர்கள் எத்தனை பேர்? அவர்களில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எத்தனை பேர்? என்பது தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.


Tags : ICORD , Road, Mental Illnesses, Corona Vaccine, iCord
× RELATED நெல்லையில் ஆசிரியருக்கு பணி ஒப்புதல்...