×

பத்திரப்பதிவுத்துறையில் மீண்டும் அதிரடி: கோவை உதவி ஐஜி உள்பட 5 பேர் மாற்றம்

சென்னை: பத்திரப்பதிவுத் துறையில் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. அந்த துறையில் பணியாற்றிய அதிகாரிகள் பலரும் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து கொள்ளையடித்து வந்தனர். இதுகுறித்து பதிவுத்துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன. புகாரைத் தொடர்ந்து, விசாரணை நடத்தும்படி தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டார்.  இதை தொடர்ந்து பதிவுத்துறையைச் சேர்ந்த 7 அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இந்த மாற்றத்தை தொடர்ந்து மேலும் பல அதிகாரிகள் மீது விசாரணை நடத்தப்பட்டு வந்தது. மேலும் பல அதிகாரிகளை கூண்டோடு மாற்றவும் முடிவு செய்தனர்.

இதையடுத்து, உதவி ஐஜிக்கள் 5 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில், மத்திய சென்னை நிர்வாகப் பிரிவு உதவி ஐஜியாக பணியாற்றி வந்த மஞ்சுளா, கோவை மண்டல உதவி ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் இருந்த ராஜ்குமார், மதுரை தெற்கு உதவி ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி பதிவு மாவட்ட உதவி ஐஜியாக இருந்த பால்பாண்டி, தூத்துக்குடி பதிவு மாவட்ட உதவி ஐஜியாகவும், திருச்சி மண்டல பதிவுப் பிரிவு உதவி ஐஜியாக இருந்த சித்ரா, மத்திய சென்னை உதவி ஐஜியாகவும், சேலம் (மேற்கு) பதிவு மாவட்ட உதவி ஐஜியாக இருந்த சுடரொளி, வேலூர் பதிவு மாவட்ட உதவி ஐஜியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த மாற்றங்களை தொடர்ந்து மேலும் பல அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Coimbatore ,Assistant ,IG , Securities Department
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்