சென்னை: மயிலாப்பூர் பகுதியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மயிலாப்பூர் கோட்டத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் 5ம் தேதி (இன்று) காலை 11.00 மணிக்கு செயற்பொறியாளர்/ மயிலாப்பூர்/ வள்ளுவர் கோட்டம், சென்னை-34 என்ற முகவரியில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.