×

பிரதமர் மோடியுடன் ஒன்றிய அமைச்சர் எல் முருகன் சந்திப்பு : திருக்குறள் – ஊக்கத்தின் முத்துக்கள் என்ற ஆங்கில நூலை மோடிக்கு வழங்கினார்!!

டெல்லி : கடந்த சில மாதங்களுக்கு முன்பு மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டபோது, பாஜகவின் மாநில தலைவராக இருந்த எல். முருகனுக்கு மத்திய இணையமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அண்மையில் நடைபெற்ற மாநிலங்களவை இடைத்தோதலில் மத்திய பிரதேசத்திலிருந்து எல்.முருகன் எம்.பி. ஆகப் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். போட்டியின்றி தேர்வானதை அடுத்து, கடந்த 1-ம் தேதி எம்.பியாக எல்.முருகன் பதவியேற்றுக்கொண்டார். எல்.முருகனுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிலையில் நாடாளுன்ற மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை, மீன் வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.அப்போது THIRUKKURAL-PEARLS OF INSPIRATION (திருக்குறள் – ஊக்கத்தின் முத்துக்கள்) என்ற ஆங்கில நூலை அமைச்சர் எல். முருகன், பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கினார்.புதிய இந்தியாவின் மக்கள் நலனுக்காக தங்கள் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ் பணிபுரிவதற்கான வழிகாட்டுதல்களை வழங்கவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் அமைச்சர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்தார்.

Tags : Union Minister ,El Murugan ,Modi , பாஜக,மோடி
× RELATED கடந்த 10 ஆண்டுகளில் கிருஷ்ணகிரி பாஜக...