×

உள்ளாட்சி தேர்தலில் கோஷ்டி பூசல் அதிமுகவில் இருந்து 8 பேர் அதிரடி நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ் நடவடிக்கை

சென்னை: இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்ட அறிக்கை:  

அதிமுகவின் கொள்கை- குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாலும், ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடும் காரணத்தினால் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த டி.பாபு, எஸ்.பாஸ்கரன், சையத்கான், கே.வெங்கடேசன், பாண்டியன், கஜேந்திரன், எல்.வெங்கடேசன், அசோக் குமார் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கட்சியினர் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Khoshti Bhassel ,EPS , Local elections, factional clashes, AIADMK, OBS, EPS
× RELATED ஓய்வூதியர்கள் ஆண்டின் எந்த...