×

கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே வேலூரில் பெட்ரோல் கிடைக்கும்: - கலெக்டர் அதிரடி உத்தரவு

குடியாத்தம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதிகளில் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம்களை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் பெட்ரோல் பங்க்கில், பெட்ரோல் போட வந்த பொதுமக்களிடம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதன் விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து, பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் போட வரும் பொதுமக்கள் அவசியம் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். இதனை பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கண்காணிக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான  சான்றிதழை காண்பித்த பிறகே பெட்ரோல் போட வேண்டும் என கலெக்டர் அதிரடியாக உத்தரவிட்டார்.


Tags : Petrol is available in Vellore only for those who have been vaccinated against corona: - Collector Action Order
× RELATED கடம்பூர் மலைப்பகுதியில் அரசு பஸ்சை வழிமறித்த யானையால் பரபரப்பு