×

சாலையோரம் குவிக்கப்பட்டிருந்த நெல் குவியல் மீது பைக் மோதி புதுமாப்பிள்ளை பரிதாப சாவு

திருவள்ளுர்: திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள கொண்டஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மணி. இவரது மகன் விநாயகம்(27). இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடம் திருமணம் செய்ய நிச்சயம் செய்யப்பட்டு, வரும் 28ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் விநாயகம் தன் மோட்டார் சைக்கிளில் வேலையின் காரணமாக பேரம்பாக்கம் வந்தார். பின்னர் அவர் வேலையை முடித்துக்கொண்டு மீண்டும் கொண்டஞ்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தார். சென்னை - அரக்கோணம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது திருவள்ளுர் அடுத்த கூவம் பகுதியில் சாலையில் குவித்து வைத்திருந்த நெல் குவியலில் மோட்டார் சைக்கிள் எதிர்பாராவிதமாக ஏறி இறங்கியதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். பொதுமக்கள் அவரை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று அவர் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

Tags : Pudumappillai , Pudumappillai tragically killed when his bike collided with a pile of paddy piled up on the roadside
× RELATED பந்தயத்தில் தோல்வியடைந்த...