×

ஆழியாறு அணையிலிருந்து உபரிநீர் வெளியேற்றம்: சித்தூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

பாலக்காடு:  கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் பெய்த தொடர் கனமழையால்  ஆழியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையில் இருந்து உபரி நீர்  வெளியேற்றப்பட்டது. இதனால் ஆனைமலை, அம்பாரம்பாளையம், மூலத்தரை, சித்தூர்  ஆகிய ஆறுகளில் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மூலத்தரை, குன்னம்காட்டுப்பதி, ஆலாங்கடவு, சித்தூர் சண்முகம் காஸ்வே, பாறைக்களம், ஆகிய தரைமட்டப்பாலங்கள் மூழ்கின.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இடி-மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் அணையில் இருந்து எந்த நேரம் என்றாலும் தண்ணீர் வெளியேற்றப்படலாம். கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் ஆற்றில் குளிக்க செல்வோர், மீன்பிடிப்பவர்கள் ஆற்றுக்கு செல்ல வேண்டாம் என்று ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.



Tags : Surplus Dam ,Siddour River , Azhiyar Dam, Warning
× RELATED இட ஒதுக்கீட்டை மேம்படுத்தும்...