×

கோட்சேவை புகழ்வது நாட்டுக்கு அவமானம்: வருண் காந்தி கண்டனம்

புதுடெல்லி: மகாத்மா காந்தியின் பிறந்த நாளான நேற்று, சில வலதுசாரிகள் டிவிட்டரில், ‘ மகாத்மாவை சுட்டுக்கொலை செய்த நாதுராம் கோட்சேவை வாழ்க‘ என புகழ்ந்துள்ளனர்’. இதற்கு கடும் கண்டனம்  தெரிவித்துள்ள பாஜ எம்பி வருண் காந்தி,  ‘இந்தியா எப்போதுமே ஆன்மிக வல்லரசாக இருந்து வருகிறது. இதற்கு அடித்தளமாக தார்மீக அதிகாரத்தை கொடுத்தவர் மகாத்மா காந்தி. ஆனால், டிவிட்டரில் கோட்சேவை குறித்து புகழ்ந்தவர்கள் நமது தேசத்தை அவமானப்படுத்தி இருக்கின்றனர். இந்த பைத்தியக்கார விளிம்பு நிலை நபர்களை, நாட்டின் தேசிய நீரோட்டத்திற்குள் நுழைய அனுமதிக்க கூடாது. இவர்களின் பெயர், தகவல்களை வெளிப்படையாக வெளியிட்டு அவமானப்படுத்த வேண்டும்,’ என கூறியுள்ளார்.

Tags : Godse ,Varun Gandhi , Kotse, shame, Varun Gandhi, condemnation
× RELATED ரேபரேலியில் பிரியங்காவை எதிர்த்து...