×

ஊரக உள்ளாட்சி தேர்தல் மண்பாண்ட தொழிலாளர்கள் திமுகவுக்கு ஆதரவு

சென்னை: தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்க தலைவரும் முன்னாள் வாரிய தலைவருமான சேம.நாராயணன் நேற்று வெளியிட்ட அறிக்கை: மண்பாண்ட தொழிலாளர்களின் நலன்கருதி சிறப்பு நிவாரண தொகையாக ரூ.5 ஆயிரத்துடன் மேலும் ரூ.5 ஆயிரம் வழங்கினார்.  எங்களின் கோரிக்கையை முதல்வர் கனிவுடன் ஏற்று 1.5 மீட்டருக்கு சுற்றுச்சூழல் அனுமதியில்லாமல் மண் எடுத்துக்கொள்ளலாம் என்று அரசாணை பிறப்பித்து ஒளியேற்றியுள்ளார். அவர் செய்துள்ள சாதனைக்கு முத்தாய்ப்பு வைக்கும் தேர்தல்தான் இந்த ஊரக உள்ளாட்சி தேர்தல். எனவே குலால சமுதாய மக்கள் திமுகவிற்கும், கூட்டணி கட்சிக்கும் பெருவாரியான வாக்குகள் அளித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : DMK , Local elections, ceramic workers, DMK
× RELATED தாய்மார்கள் மத்தியில் திமுக கூட்டணிக்கு வரவேற்பு: துரை வைகோ பேட்டி