நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடி வனப்பகுதியில் உலவும் புலியை வேட்டையாட பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம் நொய்டாவைச் சேர்ந்த சங்கீதா கோக்ரா ஆன்லைன் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த புலி ஆட்கொல்லி புலி என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.