சென்னை:முன்னாள் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் மீது தமிழ்நாடு வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 ஆம் தேதி வெங்கடாசலம், அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் சோதனையில் கணக்கில் காட்டப்படாத 13 லட்ச ரூபாய் பறிமுதல், 11 கிலோ தங்கம், 15 கிலோ சந்தன மரக்கட்டைகள் பிடிபட்டன. சட்டவிரோதமாக சந்தன மரக்கட்டைகளை வைத்திருந்ததாக கூறி, வெங்கடாசலம் மீது வனத்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.