மதுரை: காந்தி பிறந்தநாளையொட்டி மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். கிராமசபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மதுரை சென்றார். முதலமைச்சராக பதவியேற்ற பின்பு முதல்முறையாக கிராமசபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.