×

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24,354 பேருக்கு கொரோனா; 234 உயிரிழப்பு: தொற்றில் இருந்து 25,455 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.48 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.37 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 24,354 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,37,91,061ஆக உயர்ந்தது.

* புதிதாக 234 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,48,573 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 25,455 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,30,68,599ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,73,889 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் இதுவரை 89,74,81,554 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

* நேற்று ஒரு நாள் மட்டும் 69,33,838 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 97.86% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.33% ஆக உள்ளது

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.81% ஆக குறைந்துள்ளது.

Tags : Corona ,India , Corona to 24,354 people in India in the last 24 hours; 234 deaths: 25,455 recovered from the infection and discharged
× RELATED கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில்...