×

போக்சோவில் வாலிபர் கைது

ஆவடி: பட்டாபிராம் செந்தமிழ் நகர் இம்மானுவேல் தெருவை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (25). எலக்ட்ரீசியன். இவருக்கு, அதே பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மாணவி ஆன்லைன் வகுப்புக்கு விக்னேஸ்வரன் செல்போனை வாங்கி பயன்படுத்தி வந்துள்ளார். இதன் பிறகு, அவர்களுக்கிடையே காதல் மலர்ந்துள்ளது.  இதனையடுத்து, விக்னேஸ்வரன், மாணவியை திருமண செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் பழகி  வந்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் விக்னேஷ்வரன், தனது வீட்டுக்கு மாணவியை அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த விவரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து பெற்றோர் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் செய்தனர். தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் லதா தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியிடம் விசாரணை நடத்தினர். அதில், மாணவியை விக்னேஷ்வரன் பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது. இதனையடுத்து போலீசார் தலைமறைவாக இருந்த விக்னேஸ்வரனை போக்சோவில் வழக்கு பதிந்து  நேற்று மாலை கைது செய்தனர்.

Tags : Pokmon , Pokcho, Walibur, arrested
× RELATED வீட்டில் தங்கி இருந்த போது 14 வயது...