புதுடெல்லி: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது 76வது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார். கடந்த 2017ம் ஆண்டு, ஜூலை 25ம் தேதி நாட்டின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பொறுப்பேற்றார். உத்தரப் பிரதேச மாநிலம், கான்பூர் மாவட்டத்தில் உள்ள பாராங் கிராமத்தில் கடந்த 1945ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி இவர் பிறந்தார். நேற்று அவர் தனது 76வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், தலைவர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘‘ஜனாதிபதிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், ஏழைகள் மற்றும் சமூகத்தின் பிற்படுத்தப்பட்ட பிரிவினரை மேம்படுத்துவதில் அவர் கவனம் செலுத்தினார். அவர் நீண்ட ஆயுள், ஆரோக்கியத்துடன் வாழ்வதற்காக பிரார்த்திக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார். ேமலும், நேரிலும் சென்று வாழ்த்து தெரிவித்தார்.