×

மலையேற்றத்தின் போது சோகம் திரிசூல் சிகரத்தில் பனிச்சரிவு 5 கடற்படை வீரர்கள் மாயம்

புதுடெல்லி: உத்தரகாண்ட் மாநிலத்தின் குமாவுன் இமயமலையில் உள்ள  சிகரங்களில் திரிசூலம் சிகரமும் ஒன்றாகும். இந்த சிகரத்தில் வீரர்கள் மலையேற்றம் செல்வது வழக்கம். இந்நிலையில், 20 பேர் கொண்ட மலையேற்ற வீரர்கள் கடந்த 3ம் தேதி மும்பையில் இருந்து தங்கள் பயணத்தை தொடங்கினர். இவர்களில் கடற்படையை சேர்ந்த 10 வீரர்கள், சிகரத்தின் உச்சிக்கு செல்வதற்கான பயணத்தை நேற்று தொடங்கினர். அப்போது, அப்பகுதியில் எதிர்பாராத விதமாக பனிச்சரிவு ஏற்பட்டது. இதில், 5 வீரர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை.

அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடற்படை  செய்தி தொடர்பாளர் கமாண்டர் விவேக் மத்வால் கூறுகையில், ‘‘10 பேரை கொண்ட மலையேற்ற வீரர்களில் 5 பேர் பாதுகாப்பாக இருக்கின்றனர். மாயமான 5  பேரை தேடும் பணியில் கடற்படை, ராணுவம்  மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்,” என்றார்.

Tags : Trident Peaks of Tragedy , Trekking, tragedy, Trishul peak, avalanche
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில்...