×

சென்னையை உலகத் தர நகராக்கும் திட்டம் தமிழகத்துக்கு உலக வங்கி ரூ.1,112 கோடி கடன் உதவி

புதுடெல்லி: சென்னையை உலகத் தரம் வாய் ந்த நகரமாக மாற்றும் தமிழக அரசின் திட்டத்துக்கு உலக வங்கி ரூ.1,112 கோடி கடன் வழங்கியுள்ளது. சென்னை நகரத்தை மக்கள் ஆரோக்கியமாக வாழக் கூடிய, பருவநிலை மாற்ற பாதிப்புகளை சந்திக்கும் வகையில், பசுமை நிறைந்த அழகிய, உலகத் தரம் வாய்ந்த தூய்மையான நகரமாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில், தமிழக அரசுக்கு ரூ.1,112 கோடி கடன் வழங்க, உலக வங்கி முன் வந்துள்ளது.

இந்த வங்கியின் செயல் இயக்குனர்களின் கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக, உலக வங்கி நிர்வாகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த கடன் தொகை,  சென்னை நகரம் கூட்டு முயற்சி; நீடித்த நகர சேவை திட்டத்தின் கீழ் கல்வி நிலையங்கள், சுகாதார சேவை மையங்கள், குடிநீர் சப்ளை, கழிவுநீர் மேலாண்மை, போக்குவரத்து, சுகாதார வசதிகள் அதிகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை போன்றவற்றை பலப்படுத்த உதவியாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : World Bank ,Tamil Nadu , Chennai, Project, Tamil Nadu, World Bank, Credit Assistance
× RELATED இந்திய பொருளாதாரம் 7.5% வளர்ச்சி பெறும்: உலக வங்கி