×

ஆக்கிரமிப்பு ஷெட்டை அகற்ற எதிர்ப்பு தீக்குளிப்பதாக மிரட்டல் விடுத்த அதிமுக மாஜி கவுன்சிலர் கைது

வேளச்சேரி: வேளச்சேரியை சேர்ந்தவர் எம்.ஏ.மூர்த்தி. சென்னை  மாநகராட்சி 178வது வார்டு முன்னாள் கவுன்சிலர். அதிமுக அம்மா பேரவை துணை செயலாளராக உள்ளார். இவர், தனது அறக்கட்டளை மூலம் இறந்தவர்களின் உடல்களை அஞ்சலிக்கு வைக்கும் குளிர்சாதன பெட்டியை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார். இந்த குளிர்சாதன பெட்டிகளை வைப்பதற்கு, வேளச்சேரி 100 அடி சாலையில் ஏரிக்கரையை ஆக்கிரமித்து ஷெட் அமைத்திருந்தார். இதனை அகற்றும்படி நெடுஞ்சாலைத்துறை சார்பில் பலமுறை வலியுறுத்தியும் அகற்றவில்லை.

இந்நிலையில், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அந்த ஷெட்டை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த  மூர்த்தி, தனது ஆதரவாளர்களுடன் பொக்லைன் இயந்திரம் முன்பு படுத்து எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர், ஷெட்டை அகற்றினால் தற்கொலை செய்து கொள்வேன் எனக்கூறி, தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்கப்போவதாக மிரட்டல் விடுத்தார். அவரை மீட்ட போலீசார், அவரையும், அவரது ஆதரவாளர்களையும் கைது செய்து வேளச்சேரியில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர். பின்னர்,   ஆக்கிரமிப்பு ஷெட் அகற்றப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : AIADMK , Aggression, Opposition, Intimidation, AIADMK, Councilor
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...