சென்னை: உயர்நீதிமன்ற உத்தரவை மீறி பாதாள சாக்கடையில் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்யச் வைத்த விவகாரதில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உயர்நீதிமன்றம் உத்தரவை மீறி கோயம்பேடு சந்தை வாளகத்தில் உள்ள பாதாள சாக்கடையில் மனிதர்களை எந்த பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் மனிதர்களை இறக்கி தூய்மை செய்ய அதிகாரிகள் அனுமதித்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.