டெல்லி: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி சந்தித்து பேசினார். பின்னர் செய்தியர்களுக்கு பேட்டியளித்த சரண்ஜித் சிங், விவசாயிகள் போராட்டத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண பிரதமரிடம் கோரிக்கை விடுத்தேன். புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறவும் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளேன் என்று குறிப்பிட்டார்.