×

பதிலுக்கு பதில்!: பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் அனைத்து பயணிகளையும் தனிமைப்படுத்த ஒன்றிய அரசு உத்தரவு..!!

டெல்லி: பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் அனைத்து பயணிகளையும் 10 நாட்கள் தனிமைப்படுத்த ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரிட்டனில் இருந்து வருபவர்களை கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயம் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் இருந்து கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்டு செல்பவர்களை பிரிட்டன் அனுமதிக்க மறுப்பு தெரிவித்து வருகிறது. பிரிட்டனின் அணுகுமுறைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் புதிய கட்டுப்பாடுகளை இந்திய அரசு அறிவித்துள்ளது.

Tags : EU ,India ,UK , UK, India, Traveler, Loneliness, Government of the United States
× RELATED பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இந்திய...