சென்னை: வைகோ, திருமாவளவன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியதாக வைகோ, திருமா மீது வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2016ம் ஆண்டு அனுமதியின்றி எழும்பூர் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டதாக வழக்கு தொடரப்பட்டது.