×

அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக புதுச்சேரியில் சட்டத்தை மீறி உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாது!: ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து

சென்னை: அவசரமாக நடத்த வேண்டும் என்பதற்காக புதுச்சேரியில் சட்டத்தை மீறி உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாது என்று ஐகோர்ட் தெரிவித்துள்ளது. புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் வார்டுகள் ஒதுக்கீட்டில் குளறுபடிகள் உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் கருத்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதல்கட்ட தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்ய அக்டோபர் 7 வரை அவகாசம் உள்ளதால் தலையிடவில்லை என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். வார்டு ஒதுக்கீடு தொடர்பாக பதிலளிக்க திங்கள்கிழமை வரை அவகாசம் வேண்டும் என புதுச்சேரி அரசு கோரிக்கை விடுத்துள்ளது.


Tags : Icourt , Puducherry, Local Election, ICC Judges
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு