திருவனந்தபுரம்: கேரளாவில் கோட்டயம் பாலா பகுதியில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியில் மாணவி படுகொலை செய்யப்பட்டார். 3ம் ஆண்டு சமையற்கலை படிப்பு மாணவி நிதினாவை சகமாணவர் அபிஷேக் பேனாவால் குத்திக்கொன்றார். காதல் விவகாரத்தில் 22 வயதான மாணவியை கொன்ற 21 வயதான அபிஷேக்கை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.