சென்னை: கூடங்குளத்தில் மேலும் ஓர் அணுக்கழிவு மையம் அமைக்க அனுமதி தந்திருப்பது கண்டனத்திற்குரியது என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். சுப்ரீம்கோர்ட் தீர்ப்புக்கு எதிராகவும், அணுசக்தி துறை தந்த உறுதிமொழிக்கு மாறாகவும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க தரப்பட்டிருக்கும் அனுமதியை உடனே ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் டி.டி.வி.தினகரன் குறிப்பிட்டிருக்கிறார்.