செங்கல்பட்டு: பாலியல் வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிவசங்கர் பாபா செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பள்ளி சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக கேளம்பாக்கம் சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது வழக்கு தொடரப்பட்டது. சிவசங்கர் பாபா காவல் முடிவடைந்ததை அடுத்து செங்கல்பட்டு சிறார் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார்.