சென்னை: இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை அண்ணா மேலாண்மை நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெறுகிறது. இந்த பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சமூக நீதியை கடைப்பிடிக்கும் வகையில் அண்ணா மேலாண்மை நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாட்டில் அண்ணா மேலாண்மை நிலையம் அமைந்துள்ளது. இந்திய குடிமைப் பணி தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 36 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து தேர்வான 36 பேரில் 16 பேர் அண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி பெற்றவர்கள்.
அரசு பணி என்பது இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் பணியாக உள்ளது. அண்ணா மேலாண்மை நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்க உள்ளார்.