×

இந்தியாவில் மேலும் 26,727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, 277 பேர் உயிரிழப்பு, 28,246 பேர் குணம்: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை

டெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4.48 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 3.37 கோடியை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 26,727 பேர் பாதித்துள்ளனர்.

* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,37,66,707 ஆக உயர்ந்தது.

* புதிதாக 277 பேர் இறந்துள்ளனர்.

* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,48,339 ஆக உயர்ந்தது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 28,246 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,30,43,144 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,75,224 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

* இந்தியாவில் இதுவரை 89,02,08,007 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

* நேற்று ஒரு நாள் மட்டும் 64,40,451 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

* இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 97.85% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.33% ஆக உள்ளது

* சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.82% ஆக குறைந்துள்ளது.

Tags : India ,Union Health Department Report , corona
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!