சென்னை: சென்னை கலெக்டர் விஜயா ராணி வெளியிட்ட அறிக்கை: பொதுமக்கள் தங்களது குறைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு, பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னை வருகை தந்து தலைமை செயலகத்தில் தங்களது கோரிக்கை மனுக்களை சமர்ப்பித்து வருவதால், பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் நோக்குடன், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் திங்கள் கிழமை தோறும் பொது மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வரும் திங்கள் கிழமை காலை 10 முதல் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடத்தப்படும். மேலும், கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.