×

இலவச வீட்டு மனை பட்டா கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட நரிக்குறவர்கள்

திருவள்ளூர்: திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், அதிகத்தூர், நரிக்குறவர் மேடு பகுதியில் 65 நரிக்குறவர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 11 ஆண்டுகளாக அப்பகுதியில் நிரந்தரமாக வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி பலமுறை மாவட்ட கலெக்டர், வருவாய்க் கோட்ட அலுவலர், வட்டாட்சியர் ஆகியோரிடம் பலமுறை மனு கொடுத்துள்ளனர். ஆனால் இவர்களுக்கு இதுவரை இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி மாவட்டத் தலைவர் கீழானூர் எம்.பிரேம் தலைமையில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பிறகு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஸ்ரீ வித்யாவிடம் கோரிக்கை மனு வழங்கினர். இந்த நிகழ்ச்சியின்போது பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட நிர்வாகிகள் ஜெய்பீம் செல்வம், அம்பேத் ஆனந்தன், வெற்றிவேந்தன், வழக்கறிஞர் கவி, நகரத் தலைவர் ஆர்.பிரேம், தேசிங்குராஜா, விஜயராஜ், தியாகு, மாரி, சக்திவேல், ராசா, விக்கி, ஈசாக் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags : Collector's Office , Narcissists besieging the Collector's Office demanding a free housing lease
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்