சென்னை: மணலியில் உள்ள சி.பி.சி.எல் நிறுவனம், இந்திய அரசுக்கு சொந்தமான எரிபொருள் மற்றும் எரிவாயு நிறுவனமாகும். இங்கு, டீசல், மண்ணெண்ணெய், எல்பிஜி, பெட்ரோ கெமிக்கல் போன்றவை தயாரிக்கப்படுகிறது.
இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பல ஏக்கர் நிலம் மணலி எஸ்.ஆர்.எப் சாலை அருகே உள்ளது. இந்த இடத்திற்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சி.பி.சி.எல் நிறுவனம் சொத்து வரி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. வரி செலுத்த சிபிசிஎல் நிறுவனத்திற்கு மணலி மண்டல வருவாய் பிரிவு அதிகாரிகள் பலமுறை வலியுறுத்திவுள்ளனர். ஆனாலும், வரி பாக்கியை செலுத்தவில்லை. வரி பாக்கியை உடனே செலுத்த கோரி, மாநகராட்சி சார்பில், நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.