×

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை வேண்டுமென்றே அப்போலோ மருத்துவமனை தாமதப்படுத்தப்படுகிறது: ஆறுமுகசாமி ஆணையம் குற்றச்சாட்டு

புதுடெல்லி : ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு அப்பல்லோ மருத்துவமனை தான் முட்டுக்கட்டையாக உள்ளது என்று உச்ச நீதிமன்றத்தில்  ஆறுமுகசாமி ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சந்தேகங்கள் குறித்து விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை தமிழக அரசு தரப்பில் அமைக்கப்பட்டது.ஆனால் இதில் குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்திற்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் அவர் மட்டும் தற்போது வரையில் நேரில் ஆஜராகவில்லை. இதைத்தொடர்ந்து ஆணையத்திற்கு எதிராக அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மனுவில் முகாந்திரம் இல்லை எனக்கூறி அதனை தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது அப்போது ஆறுமுகசாமி ஆணையம் மற்றும் தமிழக அரசு ஆகியோர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு அப்பல்லோ மருத்துவமனை தான் முட்டுக்கட்டையாக உள்ளது என்று தெரிவித்தார், மேலும் ஆணையத்தின் விசாரணை ஒருமாதத்தில் முடிந்துவிடும் என்று விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த வழக்கில் முன்னதாக பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையையும் நீதிமன்றம் நீக்க வேண்டும் என்று தெரிவித்த ஆறுமுகசாமி ஆணைய தரப்பு, வழக்கு விசாரணையை வேண்டுமென்றே மருத்துவமனை தரப்பில் தான் தாமதப்படுத்தப்படுகிறது என குற்றம்சாட்டினார். இதையடுத்து அக்டோபர் 20ம் தேதிக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags : Apollo Hospital ,Jayalalithaa ,Arumugasami Commission , அப்பல்லோ, மருத்துவமனை,ஆறுமுகசாமி
× RELATED டெல்லியில் உள்ள அப்போலோ...