×

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும் : வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!


சென்னை : தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 2 நாட்ளுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை ஆகிய 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி , மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும். மேற்கண்ட மாவட்டங்களில் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அக்டோபர் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரையில் மூன்று நாட்களுக்கு மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தெற்கு இலங்கை கடல், தென்கிழக்கு வங்கக்கடலில் 40-50 கிமீ வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது.அக் 2 முதல் 4 வரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : TN ,Meteorological , v
× RELATED தனியார் வங்கி வசூலிப்பாளரிடம் ₹73,500 பறிமுதல்