×

8 வயது சிறுமியை 3 மாதமாக பலாத்காரம் செய்த முதியவர்: 13 வயது சிறுவனும் சிக்கினான்

தர்மபுரி: தர்மபுரி நரசய்யர் குளம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளியின் 8 வயது மகள், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறாள். இச்சிறுமிக்கு கடந்த சில நாட்களாக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, பெற்றோர் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது, சிறுமியை பரிசோதித்த மருத்துவர், சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு  உள்ளாகியுள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தினார். இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

வீட்டில் சிறுமி தனியாக இருப்பதை அறிந்த அதே பகுதியை சேர்ந்த பச்சியப்பன்(74) என்பவர், பாலியல் பலாத்காரம் செய்தததுள்ளார். சிறுமியின் விளையாட்டு  தோழனான 10 வயது சிறுவனுக்கு சாக்லெட் மற்றும் பணத்தை கொடுத்து, வீட்டிற்கு வெளியே காவலுக்கு நிற்க வைத்துள்ளார். இவ்வாறு கடந்த 3 மாதமாக அடிக்கடி அவர் சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதை கவனித்த அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவன் ஒருவனும், அந்த சிறுமியிடம் அத்துமீறி நடந்துள்ளான். மேலும், ஆபாச வீடியோக்களை காண்பித்து  பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இன்ஸ்பெக்டர் கோமதி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, முதியவர் பச்சியப்பன் மற்றும் 10, 13 வயது சிறுவர்களை கைது செய்தார்.


Tags : Elder who raped 8-year-old girl for 3 months: 13-year-old boy also caught
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...