×

அரிவாள் வாங்கணுமா?.. இனி ஆதார் கட்டாயம்

மதுரை: தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சில நாட்களுக்கு முன் மதுரை மற்றும் நெல்லையில் போலீஸ் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதில் தென்மாவட்டங்களில் குற்றவாளிகள், ரவுடிகளை கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். முக்கிய இடங்களில் செக்போஸ்ட் அமைத்து வாகன தணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் கத்தி மற்றும் அரிவாள் வாங்க ஆதார் எண் கட்டாயம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நெல்பேட்டை,  ஒத்தக்கடை, வில்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கத்தி மற்றும் அரிவாள் கடைகள் உள்ளன.

கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் ஆதார் எண்ணை கண்டிப்பாக வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என கடைக்காரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கடைகளில் கட்டாயம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் கடை உரிமையாளர்களை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். இதை வரவேற்றுள்ள சமூக ஆர்வலர்கள் போலீசாரின் அறிவுரையை கடைக்காரர்கள் முறையாக பின்பற்ற வேண்டும் என்றனர்.

Tags : Want to buy a scythe?
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...