×

ஆயுத குவியல்கள் சிக்கியது: தென்காசி அருகே போலீசார் அதிரடி

கடையம்: தென்காசி அருகே போலீசார் அதிரடி சோதனையில் ஆயுத குவியல்கள் சிக்கின. தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் காவல் துறையினர் தீவிர ரோந்துப்பணி மேற்கொண்டு குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்போர் போன்ற நபர்களின் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி தென்காசி மாவட்ட எஸ்பி கிருஷ்ணராஜ் அறிவுறுத்தலின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு பழைய குற்றவாளிகள், குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாப்பான்குளம் பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் இருந்தபோது சடையன் (70) என்பவருக்கு சொந்தமான இரும்பு பட்டறையில் 50 பழைய அரிவாள், 15 புதிய அரிவாள், 2 வாள் கைப்பற்றப்பட்டது. அதே பகுதியில் உள்ள லட்சுமி சங்கர் என்பவரின் பட்டறையில் இருந்து 10 அரிவாள்கள் பறிமுதல் செய்யபட்டன. மேலும் மடவார்விளாகத்தை சேர்ந்த சேகர் என்பவரின் பட்டறையில் இருந்து 30அரிவாள்கள் பறிமுதல் செய்யபட்டன. இதுபோன்று பட்டறை வைத்திருப்பவர்கள் அரிவாளை விற்கக்கூடாது என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : Thapasi , Heaps of weapons, police, action
× RELATED தென்காசி அருகே ஆட்டோ மீது வேன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு