×

கிராவல் மண் கொள்ளை - அதிமுக பிரமுகர் லாரி பறிமுதல்

மதுரை: வாடிப்பட்டி அருகே அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ லாரி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மாணிக்கத்துக்கு சொந்தமான லாரியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர். வாடிப்பட்டி அருகே சடையம்பட்டி பிரிவில் வருவாய்த்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். வாகன சோதனையின் போது 6 யூனிட் கிராவல் மண் ஏற்றி வந்த லாரி பிடிப்பட்டது. விசாரணையில் உரிய அனுமதியின்றி லாரியில் கிராவல் மண் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கிராவல் மண் ஏற்றிவந்த லாரி சோழவந்தான் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ மாணிக்கத்துக்கு சொந்தமானது.

Tags : Gravel Mud Robbery , Gravel soil, plunder
× RELATED தமிழ்நாட்டில் இன்று முதல் 2...