×

போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை : டெல்லி ஐகோர்ட் வளாகத்தில் பயங்கரம்

புதுடெல்லி: டெல்லி ஐகோர்ட் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். டெல்லி உயர்நீதிமன்ற வளாகத்தின் கேட் எண்: 3ல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 30 வயதுடைய போலீஸ்காரர் டிங்குராம், இன்று காலை 9.30 மணியளவில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து, நீதிமன்ற வளாகத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், போலீஸ்காரரின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் ராஜஸ்தான் மாநில ஆயுதபடையை சேர்ந்தவர் என்றும், அவரது சொந்த ஊர் கோட்காசிம் அடுத்த அல்வாரைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

மேலும், விடுப்பில் சென்ற அவர் இன்று காலை டெல்லி திரும்பினார். பணியில் சேர்ந்தவுடன் தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்னையா? வேறு ஏதேனும் காரணங்களா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.



Tags : Delhi's Icourt , டெல்லி, ஐகோர்ட் ,போலீஸ்காரர், துப்பாக்கி,தற்கொலை
× RELATED உபியின் பிரபல தாதா முக்தார் அன்சாரி மாரடைப்பால் மரணம்