×

கூந்தலை காக்க...

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

பெண்களின் அழகுக்கு கூந்தல்தான் மூலதனம். நல்ல கூந்தல் நல்ல ஆரோக்கியத்துக்கு எடுத்துக்காட்டு.கவனக்குறைவு, கூந்தலை சரியாக பராமரிக்காமை, செம்பட்டை, முடி உதிர்தல் போன்றவையால் கூந்தல் வறட்சித்தன்மையை அடைந்துவிடும். இதனைப் போக்க இதோ சில எளிய முறைகள்....

* வாரம் இருமுறை தேங்காய்ப்பாலை தலையில் தேய்த்து, பிறகு அலசினால் வறட்சி நீங்கி கூந்தல்
கருகருவென வளரும். செம்பட்டையும் அகலும்.

* ஆலிவ் எண்ணெய், மீன் எண்ணெயைச் சாப்பிடும் பெண்களுக்கு, செம்பட்டை  ஏற்படாது.

* அதிமதுரப் பொடியை எருமைப்பாலில் குழைத்து, வெண்ணெய் நிலைக்கு வந்ததும், தலையில் தேய்த்து குளித்தால், தலைமுடி உதிராது.

* துளசி இலையை அரைத்து, தலையில் தேய்த்து 15 நிமிடம் வைத்திருந்து குளித்தால் பேன் தொல்லை விலகும்.

* நல்லெண்ணெய், வேப்பம்பூ, வெல்லம் ஆகியவற்றை சேர்த்து காய்ச்சி வடிகட்டி, தலைக்குத் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.

* சிலருக்கு பித்த நரை ஏற்படும். இதற்கு கறிவேப்பிலை, பச்சைக்கொத்தமல்லி, இஞ்சி மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம்.

* மல்லிகைப்பூவை நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி குளித்து வந்தால், கண் எரிச்சல் நீங்கி உடல் உஷ்ணமும் குறையும்.

- ராஜி ராதா, பெங்களூரூ

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!